0
மத்திய பிரதேசத்தின் சியோனியில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது.
இந்த நிலநடுக்கமானது ரிக்டா் அளவுகோலில் 3 ஆக பதிவாகியுள்ளது. மேலும் 15 கி.மீ. ஆலத்தில் மையம் கொண்டிருந்தது என்று நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் புகுந்தனர். எனினும் இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்போ, பொருள் சேதமோ ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.