Wednesday, April 24, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா 46ஆவது நாளாகவும் தொடரும் விவசாயிகளின் போராட்டம்

46ஆவது நாளாகவும் தொடரும் விவசாயிகளின் போராட்டம்

1 minutes read

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியின் நுழைவாயிலான சிங்கூ பகுதியில் விவசாயிகள் முன்னெடுத்து வரும் போராட்டம் இன்று 46ஆவது நாளாகவும் தொடர்கிறது.

விவசாயிகள் மத்திய அரசுடன் நடத்திய எட்டு சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னரும் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெற முடியாது என்று மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

இதனால் விவசாயிகள் தங்கள் போராட்டத்தைத் தொடர்வதாக அறிவித்துள்ளனர். விவசாயிகளுக்கு ஊக்கம் அளிக்க பஞ்சாபில் இருந்து வந்த பிரபல இசைப்பாடகர்கள் பஞ்சாபி திரைப்படப் பாடல்களைப் பாடி மகிழ்வித்தனர்.

இதேவேளை, போராட்டம் என்ற பெயரில் விவசாயிகள் பிரியாணி தின்றுக்கொண்டும் கொரோனாவையும் பறவைக்காய்ச்சலையும் பரப்பிக் கொண்டும் இருப்பதாக ராஜஸ்தான் பாஜக சட்டமன்ற உறுப்பினர் மதன் திலாவர் விமர்சித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More