இந்தியாவில் நேற்று முன்தினம் 4.01 இலட்சம், நேற்று 3.92 இலட்சம் பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது.
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 3 இலட்சத்து 68 ஆயிரத்து 147 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றினால் ஒரே நாளில் 3,417 பேர் உயிரிழந்துள்ளனர்.
தொற்று பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3 இலட்சத்து 732 ஆக உள்ளது.
இந்தியாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 கோடியே 99 இலட்சத்து 25 ஆயிரத்து 604-ஆக உள்ளது.
தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1,62,93,003- ஆக உள்ளது.
தொற்று பாதிப்புக்கு இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2 இலட்சத்து 18 ஆயிரத்து 959 ஆக உள்ளது.
கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 34 இலட்சத்து 13 ஆயிரத்து 642 ஆகும்.
இந்தியா முழுவதும் இதுவரை 15 கோடியே 71 இலட்சத்து 98 ஆயிரத்து 207 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.