கர்நாடகாவில் அமைந்துள்ள அரசு வைத்தியசாலையொன்றில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் உட்பட மொத்தம் 24 நோயாளர்கள் திங்கட்கிழமை உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆக்ஸிஜன் பற்றாக்குறை மற்றும் ஏனைய காரணங்களினால் அவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கர்நாடகாவின் சாமராஜநகரில் அமைந்துள்ள மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் கடந்த 24 மணி நேரத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை மற்றும் ஏனைய காரணங்களால் இறந்துவிட்டதாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் இன்று காலை கூறியுள்ளது.