யாழ் கோப்பாய் பகுதியில் கனரக வாகனங்கள் திருத்தும் கராச்சில் டிப்பர் வாகனத்தின் கீழ் பழுது பார்த்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளர்.இச்சம்பவம் இன்று(5) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கோப்பாய் சந்தி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இதில் மானிப்பாயை சேர்ந்த சிங்கராசா லிங்காதரன் வயது 41 என்பவர் உயிரிழந்துள்ளார்.டிப்பரின் சுமை பெட்டியை ஜக் மூலம் தூக்கி விட்டு பழுது பார்த்துக் கொண்டிருந்த போது ஜக் நழுவி பெட்டி இளைஞன் மீது விழுந்துள்ளதால் குறித்த இளைஞர் உடல் நசுங்கி பலியாகியுள்ளார்.சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.