இலங்கையில் கொரோனா வைரசின் பரவல் ஆபத்து நீங்கவில்லை என தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.நாட்டில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சமூகத்திற்குள் கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்படலாம் என சங்கத்தின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
இதனால் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து பின்பற்றுமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.தற்போது தொற்றுக்குள்ளானவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்குள் அடையாளம் காணப்பட்டுள்ளமையினால் வைரஸ் கட்டுப்படுத்திய நிலைமை ஒன்று இலங்கையில் காணப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.