Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கையில் கரும்பூஞ்சை தொற்றால் முதல் மரணம் பதிவாகவில்லை என அறிவிப்பு!

இலங்கையில் கரும்பூஞ்சை தொற்றால் முதல் மரணம் பதிவாகவில்லை என அறிவிப்பு!

1 minutes read

கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் உயிரிழந்தவர் கரும்பூஞ்சை நோயால் உயிரிழக்கவில்லை என வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஷெல்டன் பெரேரா தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ள அவர், குறித்த கொரோனா மரணம் செப்டம்பர் 26ஆம் திகதி பதிவானதாக தெரிவித்தார்.

இதனையடுத்து, நுரையீரலில் அசாதாரணம் காணப்பட்ட பின்னர் நுரையீரல் திசு மாதிரியை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டதாக தெரிவித்தார்.

குறித்த அறிக்கை நேற்று வெளியிடப்பட்ட நிலையில், அங்கு பாதிக்கப்பட்டவரின் நுரையீரலில் கருப்பு பூஞ்சைகள் இருப்பதாக அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டதாக அவர் கூறினார்.

எனினும், குறித்த மரணம் நிமோனியாவால் நிகழ்ந்ததென்றும் மரணத்திற்கு காரணம் கரும்பூஞ்சை அல்ல என பிரேத பரிசோதனை அறிக்கையில் கண்டறியப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More