Thursday, March 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கையில் அதிகரித்து வரும் எரிவாயு அடுப்புகள் வெடிக்கும் சம்பவம்!

இலங்கையில் அதிகரித்து வரும் எரிவாயு அடுப்புகள் வெடிக்கும் சம்பவம்!

1 minutes read

சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது எரிவாயு அடுப்புக்களும் வெடித்து சிதறும் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.

அந்தவகையில் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) அம்பாறை- சாய்ந்தமருது பகுதியில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவவொன்று பதிவாகி இருந்தது. இதன்படி இந்த மாதத்தில் மாத்திரம் 6 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இதேவேளை நேற்றைய தினம், புத்தளம் ஆராய்ச்சி கட்டுவ பகுதியிலும் சிலிண்டர் தீப்பிடித்த நிலையில், அதனை அணைக்க முற்பட்டவர்கள், அது அணையாத நிலையில் அதனை அருகில் இருந்த நீர் நிலைக்குள் தூக்கி வீசியுள்ளனர். அதனால் சிலிண்டரில் வெடிப்பு ஏற்படாததால் பாரிய அனர்த்தம் தவிக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வடக்கில் எரிவாயு அடுப்புக்கள் வெடித்து சிதறும் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.

கடந்த சனிக்கிழமை, கிளிநொச்சி- திருவையாறு பகுதியிலுள்ள வீடொன்றில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறி இருந்தது. அதேபோன்று நேற்றைய தினம், யாழ்ப்பாணம் கந்தரோடை பகுதியிலுள்ள வீடொன்றில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறிய சம்பவம் பதிவாகியுள்ளது.

கந்தரோடை வீட்டில் எரிவாயு சிலிண்டர் சமையல் அறைக்கு வெளியே வைக்கப்பட்டு இருந்தமையால், அடுப்பு வெடித்து தீ பிடித்தபோதிலும் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More