Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தீர்வுக்கான பேச்சு விரைவில் ஆரம்பம் | என்கிறார் பிரதமர் தினேஷ்  

தீர்வுக்கான பேச்சு விரைவில் ஆரம்பம் | என்கிறார் பிரதமர் தினேஷ்  

1 minutes read

தேசிய பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தொடர்பில் தமிழ், முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் விரைவில் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கும் என பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

ஊடக சந்திப்பொன்றில் வைத்து அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தேசிய பிரச்சினைகள் தொடர ஒருபோதும் இடமளிக்க முடியாது.

தீர்வுக்கான பேச்சு விரைவில் ஆரம்பம்: பிரதமர் தினேஷ் அறிவிப்பு | Solutions To National Problems Dinesh Gunawardena

இன பிரச்சினை

குறுகிய காலத்துக்குள் இந்த பிரச்சினை தொடர்பில் உரிய தீர்வுகளைக் காண வேண்டும். 

இந்த நிலையில் தேசிய பிரச்சினைகள் நீடித்தால் இன, மத நல்லிணக்கம் ஏற்படாது.

நாட்டில் ஏதோவொரு வகையில் இன ரீதியிலும், மத ரீதியிலும் கருத்து மோதல்கள் உருவாகின்றன.

தீர்வுக்கான பேச்சு விரைவில் ஆரம்பம்: பிரதமர் தினேஷ் அறிவிப்பு | Solutions To National Problems Dinesh Gunawardena

மக்களிடத்தில் ஏற்படவுள்ள பிளவுகள்

இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களிடத்தில் பிளவுகளை ஏற்படுத்திக் குளிர்காய சிலர் முற்படுகின்றனர்.

தீர்வு விடயம் தொடர்பில் தமிழ், முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளுடன் அரசாங்கம் விரைவில் பேச்சுவார்த்தை முன்னெடுக்கும் என தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More