புத்தளம் கல்லடி மதுரகம பகுதியில் இன்று அதிகாலை காட்டு யானைகள் உட்புகுந்து 50 ற்கும் அதிகமான பயன்தரும் தென்னை மரங்களை துவம்சம் செய்துள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு காட்டு யானைகள் தமது தோட்டத்திற்குள் உட்புகுந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியும் அவர்கள் அசமந்த போக்காக செயற்பட்டுள்ளதாகவும் இதன்போது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இரவு நேரங்களில் அவசர நிலமைகளில் கூட வெளியில் செல்ல முடியாமல் இருப்பதாகவும் அப்பகுதியில் காட்டு யானைகளின் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகி வருவதாக அப்பகுதி மக்கள் கவலைத் தெரிவிக்கின்றனர்.
இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குறித்த காட்டு யானைகளை காட்டிற்கு விரட்டுவதற்கு நடவடிக்கைகளை எடுக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.