0
எகிப்து சென்றிருந்த இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று நாடு திரும்பினார்.
எகிப்தில் நடைபெற்ற காலநிலை மாற்றம் தொடர்பாள ‘கோப் 27’ மாநாட்டில் பங்கேற்க, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த 6ஆம் திகதி அங்கு சென்றிருந்தார்.
இந்நிலையில், இன்று அதிகாலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.
ஜனாதிபதி இந்த விஜயத்தின் போது சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஷ்டலினா ஜோர்ஜியேவாவைச் சந்தித்து இலங்கைக்கான கடன் உதவி குறித்து கலந்துரையாடியிருந்தார்.