March 26, 2023 9:06 am

மட்டக்களப்பில் ரயிலில் மோதி இளைஞர் பரிதாபச் சாவு!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ரயிலில் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் சித்தாண்டி – முறக்கொட்டான்சேனை – தேவபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்த இளைஞர் சித்தாண்டி – 1, அலைமகள் வீதியைச் சேர்ந்த 25 வயதுடைய சிவகுமார் குவேந்திரன் என என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்துள்ள இளைஞரின் உடல் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை சந்திவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்