0
“இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியம்.”
– இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“பொருளாதார நெருக்கடிக்கு யார் காரணம் என்பது தொடர்பில் பரிசோதனை நடத்துவதை விடுத்து நாட்டின் எதிர்காலம் தொடர்பில் சிந்தித்து அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியம்” – என்றார்.