Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பிள்ளையான் – சாணக்கியன் கடும் சொற்போர்!

பிள்ளையான் – சாணக்கியன் கடும் சொற்போர்!

2 minutes read

இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் மட்டக்களப்பு மாவட்டத்தை சூறையாடுவதாகத் தெரிவித்து அவர் மீது பல மோசடிக் குற்றச்சாட்டுக்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தொடுத்ததால் இருவருக்கும் இடையில் தர்க்கம் ஏற்பட்டது.

நாடாளுமன்றத்தில் இன்று (21) நடைபெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான 6 ஆம் நாள் விவாதம் நடைபெற்றது. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் உரையாற்றிய போதே இந்தத் தர்க்கம் ஏற்பட்டது.

சாணக்கியன் எம்.பி. உரையாற்றும் போது,

“மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரான இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் செய்யும் மோசடியைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கையை எடுங்கள். முடிந்தால் அவரது திருட்டைத் தடுத்து நிறுத்துங்கள். சந்திரகாந்தன் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சூறையாடுகின்றார்” – என்றார்.

இதன்போது ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன்,

“சாணக்கியன் தொடர்ந்து எனது பெயரைப் பயன்படுத்துகின்றார் .பொய்க் குற்றச்ச்சாட்டுக்களை முன்வைக்கின்றார். முறையற்ற வகையில் தாழ்த்திப் பேச வேண்டாம்” – என்றார்.

இந்நிலையில் தனது உரையைத் தொடர்ந்த சாணக்கியன் எம்.பி.,

“நாடாளுமன்றத்தில் எம்.பிக்களுக்குப் பேச்சு உரிமை உள்ளது. இவரது 20 மோசடிகள் தொடர்பான விபரங்கள் என்னிடத்தில் உள்ளன. ‘கனிஷ்கா’ என்ற இவருக்கு ஆதரவான நிறுவனத்தின் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாயத்துறை அழிக்கப்படுகின்றது. வட்டவான் பிரதேசத்தில் இவரது ஆதரவாளர்களுக்குக் காணி வழங்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட மக்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்துவதற்கு இவர் பெரும் தடையாக உள்ளார். மறுபுறம் வீதி அபிவிருத்திலும் மோசடி இடம்பெறுகின்றது. அனைத்து அபிவிருத்திச் செயற்பாடுகளிலும் அரச நிதி மோசடி செய்யப்பட்டுள்ளது. முடிந்தால் இவற்றை அவர் பொய் என்று சபையில் நிரூபித்துக் காட்டட்டும்” – என்றார்.

இதன்போது மீண்டும் எழுந்த இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன்,

“சாணக்கியன் தொடர்ந்து எனது பெயரைக் குறிப்பிட்டு பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். முறைகேடான வகையில் பேசுகின்றார்” – என்றார்.

மீண்டும் தனது உரையைத் தொடர்ந்த சாணக்கியன் எம்.பி.,

“மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்குச் சொந்தமான காணியை இவரது மைத்துனர் முறைகேடு செய்துள்ளார். நான் பொய் உரைக்கவில்லை ஆதாரம் உள்ளது. இவரது தரப்பினர் போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புபட்டுக் கைது செய்யப்பட்டுள்ளார்கள். காலநிலை மாற்றத்துக்கான பல்கலைக்கழகத்தை ஸ்தாபிக்க முன்னர் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தித் குழுத் தலைவர் பதவியில் இருந்து இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனை மாற்றியமைக்க வேண்டும். ஏனெனில் இவர் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு மாத்திரமல்ல முழு நாட்டுக்கும் பாதிப்பு ஏற்படும் வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இயற்கை வளங்களைச் சூறையாடுகின்றார்” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More