Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை முத்து சிவலிங்கத்தின் மறைவு மலையகத்துக்குப் பேரிழப்பு! – ஜீவன் இரங்கல்

முத்து சிவலிங்கத்தின் மறைவு மலையகத்துக்குப் பேரிழப்பு! – ஜீவன் இரங்கல்

1 minutes read

“இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் குடும்பம் ஒரு சாணக்கிய தொழிற்சங்கவாதியை இழந்துவிட்டது. முத்து சிவலிங்கத்தின் இழப்பு காங்கிரஸுக்கு மட்டுமல்ல மலையக மக்களுக்கும் ஒரு பேரிழப்பாகும்.”

– இவ்வாறு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“1994 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருளில் இருந்த மலையகத்துக்குத் தன்னுடைய அமைச்சின் ஊடாக மின்சாரத்தைப் பெற்று ஒளி தந்தவர் அமரர் முத்து சிவலிங்கம்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மூத்த தலைவரென சௌமிய மூர்த்தி தொண்டமான் ஐயா போற்றப்பட்டதன் பின் தற்போது மூத்த தலைவர் என்ற வரிசையில் முத்து சிவலிங்கம் ஐயாவும் இணைவார்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் 83 வருட அரசியல் மற்றும் தொழிற்சங்க வரலாற்றில் பல தசாப்த காலமாக தொழிற்சங்கம் மற்றும் அரசியல் வழிகாட்டியாக இருந்து இந்த மாபெரும் அமைப்பின் தலைவராகவும், போசகராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், மலையக மக்களின் பிரதி அமைச்சராகவும் பதவி வகித்து எம்மை வழிநடத்திய மூத்த தலைவரின் முத்து சிவலிங்கத்தின் இழப்பு ஈடுசெய்ய முடியாத ஒன்றாகும்.

காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் ஐயா சௌமியமூர்த்தி தொண்டமானின் மறைவுக்குப் பின் எனது தந்தை அமரர் ஆறுமுகன் தொண்டமானின் அரசியல் மற்றும் தொழிற்சங்க வழிகாட்டியாக இவர் இருந்தார். எனது தந்தையின் மறைவுக்கு பின் என்னையும் இவர் வழிநடத்தினார் என்பதை மறந்துவிட முடியாது.

அன்னாரின் பிரிவால் துயர்கொண்டுள்ள குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு, இவரின் குடும்பத்தாருடன் துக்கத்தையும் பகிர்ந்துகொள்கின்றேன்” – என்றுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More