Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வெளியிலுள்ள குற்றக் கும்பலை நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை

வெளியிலுள்ள குற்றக் கும்பலை நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை

0 minutes read

இலங்கையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த 10 பேர் டுபாயில் இருக்கின்றனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர்களை அந்நாட்டில் இருந்து நாடு கடத்துவதற்கான கோரிக்கையை டுபாய் அரசுக்கு அனுப்ப இலங்கை அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது என அறியமுடிகின்றது.

டுபாய் அரசால் ஏற்கனவே இலங்கைக்கு அனுப்பப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவர் ஒருவர், பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்ததன் காரணமாக, டுபாயில் தலைமறைவாகியுள்ள குற்றக் கும்பல் உறுப்பினர்களை இலங்கைக்கு நாடு கடத்துவது தடைப்பட்டிருந்தது.

இது தொடர்பில் சர்வதேச மன்னிப்புச் சபை டுபாய் அரசிடம் அளித்த முறைப்பாட்டில் குறித்த குற்றக் கும்பல் உறுப்பினர்களை இலங்கைக்கு அனுப்பும் செயற்பாட்டை இடைநிறுத்துமாறு கோரிக்கை விடுத்திருந்தது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More