Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தமிழ்க் கட்சிகளின் பிளவால் தமிழ் மக்களுக்கு ஆபத்து! – பிரதமர் கருத்து

தமிழ்க் கட்சிகளின் பிளவால் தமிழ் மக்களுக்கு ஆபத்து! – பிரதமர் கருத்து

1 minutes read

“உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஆசனங்களுக்கு ஆசைப்பட்டு தமிழ்க் கட்சிகள் பிளவடைந்து பல குழுக்களாகப் போட்டியிட முடிவெடுத்துள்ளன. இது தமிழ் மக்களுக்கே ஆபத்தாக மாறும். அவர்களின் வாக்குகள் சிதறுண்டு உண்மையான பிரதிநிதித்துவத்தை அடையாளம் காண முடியாத நிலை ஏற்படும்.”

– இவ்வாறு பிரதமரும் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.

நாடாளுமன்ற வளாகத்தில் வடக்கின் தேர்தல் நிலைமை தொடர்பில் கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறின

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வடக்கில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட பிரதான கட்சிகள் தனித்தனியே போட்டியிடுகின்றன.

ஆனால், தமிழ் மக்கள் செறிந்து வாழும் வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட பல தமிழ்க் கட்சிகள் சிதறித் தேர்தலைச் சந்திக்க முடிவெடுத்துள்ளன.

இது தமிழ் மக்களுக்கே குழப்பத்தை ஏற்படுத்தும். அவர்களின் வாக்குகளுக்குப் பாதிப்பையும் ஏற்படுத்தும்.

தெற்கின் நிலைமை வேறு வடக்கின் நிலைமை வேறு. இதைத் தமிழ்க் கட்சிகள் உணர்ந்திருக்கவேண்டும்” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More