1
கொழும்பில் இன்று மாலை ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இராஜகிரிய – புக்கமுவ வீதியில் மாலை 5.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் கடை ஒன்றுக்குள் நுழைந்து இந்தத் துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் 56 வயதான நபரே உயிரிழந்துள்ளார்.