Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை சர்வகட்சி மாநாட்டைப் புறக்கணித்தது தமிழ் முற்போக்குக் கூட்டணி!

சர்வகட்சி மாநாட்டைப் புறக்கணித்தது தமிழ் முற்போக்குக் கூட்டணி!

1 minutes read

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இன்றைய (26) சர்வகட்சி மாநாட்டை தமிழ் முற்போக்குக் கூட்டணி புறக்கணித்துள்ளது.

“எமது பிரச்சினைகள் பற்றியும் பேசப்படாவிட்டால் எதற்காக நாங்கள் பார்வையாளர்களாகக் கலந்துகொள்ளவேண்டும்?” என்ற கேள்வியுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் இது தொடர்பான நடத்தை தொடர்பில் அதிருப்தியை வெளியிட்டுள்ளார் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்பி.

இது தொடர்பில் மனோ எம்.பி. மேலும் கூறியதாவது:-

“தேசிய இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான உங்கள் அறிவிக்கப்பட்ட செயற்பாட்டில், இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளுடனும், எமது மக்களின் அரசியல் அபிலாஷைகள் தொடர்பில் பேசுங்கள் என நாம் திரும்பத் திரும்ப ஜனாதிபதி விக்கிரமசிங்கவிடம் கோரினோம்.

எமது பிரச்சினைகள் பற்றி பேச உங்கள் தலைமையில் விசேட அதிகாரம் கொண்ட குழுவை நியமியுங்கள் எனவும் கோரியுள்ளோம்.

ஆனால், பகிரங்க மேடைகளில் இருந்து கூறப்பட்ட சில கருத்துக்களைத் தவிர, இது தொடர்பில் இதுவரை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிகாரபூர்வமாக எதுவும் செய்யவில்லை.

ஈழத்தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு, பொறுப்புக்கூறல் தொடர்புகளில் வடக்கு, கிழக்கு கட்சிகளுடன் நடத்தப்படும் பேச்சுகளை நாம் முழு மனதுடன் வரவேற்கின்றோம்.

ஆனால், மலையகத் தமிழரின் அரசியல் அபிலாஷைகள் இன்று தோட்ட வரம்புகளுக்கு வெளியே வளர்ந்து விட்டன என்பதை அனைத்துத் தரப்பினரும் அறிய வேண்டும்.

தேசிய இனப்பிரச்சினை என்பது இன்று வடக்கு, கிழக்கை மட்டும் மையம் கொண்டதல்ல. அது தேசியமயமானது என்பதை அரசு புரிந்துகொள்ள வேண்டும்.

தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஒரு எதிரணிக் கட்சியாக இருந்தாலும்கூட, தேசிய இன பிரச்சினை தொடர்பில் பேச்சுகளை நடத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு மக்கள் ஆணை இருக்கின்றதா என நாம் கேள்வி எழுப்பவில்லை. இந்நாட்டின் பிரதான பிரச்சினை தேசிய இன பிரச்சினை ஆகும்.

இந்நாட்டின் எந்தவொரு அரச தலைவருக்கும் இதற்காக விசேட மக்களாணை அவசியமில்லை என்பது எமது நிலைப்பாடு. இந்தக் கருத்தை நாம் நமது வடக்கு, கிழக்கு நட்பு கட்சிகளுடனும் பரிமாறிக் கொண்டுள்ளோம்.

ஆகவே, இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இது தொடர்பான நடத்தையில் நாம் அதிருப்தியடைந்துள்ளோம்” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More