Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இளவாலையில் இளைஞர் கொலை! – இருவர் கைது

இளவாலையில் இளைஞர் கொலை! – இருவர் கைது

1 minutes read

யாழ்ப்பாணத்தில் கம்பியால் தாக்கி இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இளவாலைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியவிளான் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த நபர் வீதியில் சென்று கொண்டிருந்த வேளை போதையில் வந்த அதே பகுதியை சேர்ந்த இருவர் அவருடன் முரண்பட்ட நிலையில் முரண்பாடு கைகலப்பாக மாறி குறித்த நபரை கம்பியால் தாக்கியுள்ளனர்.

இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த நபர் அயலில் உள்ளவர்கள் மூலம் மீட்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பெரியவிளான் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய நிரோஜன் என்பவரே சம்பவத்தில் உயிரிழந்தவராவார்.

இந்தப் படுகொலை தொடர்பில் இருவர் இளவாலைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

பெரியவிளான் பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவனும், 20 வயதுடைய இளைஞருமே கைது செய்யப்பட்டனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்கள் இருவரும் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர் என்று இளவாலைப் பொலிஸார் தெரிவித்தனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More