இலங்கையின் 75 ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, ஒரு வார காலத்துக்கு அரச நிறுவனங்கள் இயங்கும் அனைத்துக் கட்டடங்களிலும் தேசியக் கொடியை ஏற்ற அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி பெப்ரவரி 4 ஆம் திகதி 75 ஆவது சுதந்திர தின விழாவைச் சிறப்புறக் கருதி முதலாம் திகதி முதல் 7ஆம் திகதி வரை தேசியக் கொடி ஏற்றப்படும்.
பொது நிர்வாகம் மற்றும் உள்துறை அமைச்சகம் இது தொடர்பான சுற்றறிக்கையையும் வெளியிட்டுள்ளது.
அதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நிறுவனங்களின் தலைவர்களுக்கு உரிய சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.