இலங்கையில் உள்ளூராட்சி சபைத் தேர்தலைக் கண்காணிக்க 7 ஆயிரம் சுயாதீன கண்காணிப்பாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என்று தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவிக்கின்றன.
மாவட்ட மட்டத்தில் தேர்தல் கண்காணிப்பாளர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று பப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
அந்த மாவட்டங்களில் அடுத்த வாரம் முதல் தேர்தல் கண்காணிப்பாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.