Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பயங்கரவாத வழக்கிலிருந்து வசந்த முதலிகே விடுதலை!

பயங்கரவாத வழக்கிலிருந்து வசந்த முதலிகே விடுதலை!

1 minutes read

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்த அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேவை அந்த வழக்கிலிருந்து விடுவிப்பதாக கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான வழக்குக்காக வசந்த முதலிகே இன்று கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்திலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வசந்த முதலிகே பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இது தொடர்பான வழக்கு கொழுப்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த வழக்கில் இருந்து வசந்த முதலிகே விடுவிக்கப்பட்டாலும், இன்னும் சில வழக்குகளுக்காக அவர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More