Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை செப்டம்பருக்குள் நாடு ஸ்திரநிலையை அடையும் | ரணில்

செப்டம்பருக்குள் நாடு ஸ்திரநிலையை அடையும் | ரணில்

2 minutes read

ங்குரோத்து நிலையிலிருந்து விடுபட்டு கௌரவமான வாழக்கூடியவாறு நாட்டை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

கேகாலை – அரநாயக்க ‘அசுபினி எல்ல நீர் விநியோகத் திட்டம்’ பொது மக்களிடம் கையளிக்கப்பட்ட சனிக்கிழமை (20) நிகழ்வில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

2018இல் பிரதமராக இருந்தபோது இந்த குடிநீர் திட்டத்துக்கு அடிக்கல் நாட்ட வந்தேன். இன்று ஜனாதிபதி என்ற ரீதியில் அந்த நீர்த் திட்டத்தை திறந்துவைக்க வருவதை பெரும் பாக்கியமாக கருதுகின்றேன். இந்த திட்டத்தை நிறைவு செய்ய முடிந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

கபீர் ஹசீம் அமைச்சரால் ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டம் அடுத்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டது. அமைச்சர் ஜீவன் தொண்டமானின் பதவிக் காலத்தில் நிறைவு செய்யப்பட்டுள்ளது.

இன்று ஆரம்பிக்கப்படும் இந்த குடிநீர் திட்டத்தால் சுமார் 2 இலட்சம் மக்களின் குடிநீர் தேவை பூர்த்தியாகும். இந்த குடிநீர் திட்டத்துக்கு உதவிய அனைத்து ஊழியர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

கடந்த காலங்களில் இலங்கை வங்குரோத்து நாடாக அறிவிக்கப்பட்ட பின்னர், முதலீட்டாளர்கள் எவரும் நாட்டுக்கு வரவில்லை. நாட்டில் இருந்த முதலீட்டாளர்களும் நாட்டை விட்டு வெளியேறினர். அவ்வாறான சூழலில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கைக்கு உதவிகளை வழங்குவதில் ஆர்வம் காட்டுவதில்லை.

இவ்வாறான சூழ்நிலையில் நான் நாட்டின் ஜனாதிபதியாக பொறுப்பை ஏற்று, சர்வதேச நாணய நிதியத்துக்கு சென்று நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரமான நிலைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளேன். ஏனென்றால், சிங்களவராக இருந்தாலும் சரி, தமிழராக இருந்தாலும் சரி, மக்கள் பிச்சைக்காரர்களாக வாழ விரும்புவதில்லை. அவர்கள் பெருமையுடன் கண்ணியமாக வாழவே விரும்புகிறார்கள்.

சர்வதேச நாணய நிதியம் எமக்கு கடினமான நிபந்தனைகளை விதித்திருந்தது. ஆனால், எங்களுக்கு வேறு மாற்றுவழிகள் இருக்கவில்லை. இதற்கு முன்னரும் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளில் இதேபோன்ற நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டன.

அங்கு ஓர் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடனான கொடுக்கல் – வாங்கல்களில்  இருந்து விலகியது. ஆனால், நாம் சர்வதேச நாணய நிதியத்துக்குச் சென்று சரியான முகாமைத்துவத்துடன் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்கிறோம்.

எதிர்வரும் செப்டம்பர் மாதத்துக்குள், நமது நாட்டின் கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை வெற்றியடையச் செய்து, பொருளாதாரத்தை ஒரு குறிப்பிட்ட ஸ்திரமான நிலைக்கு கொண்டுவர முடியும். சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றியுள்ளோம்.

இன்று பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களும் ஐக்கிய தேசிய கட்சியின் பொருளாதாரக் கொள்கைக்கு தமது விருப்பத்தை வெளிப்படுத்தி தேவையான ஆதரவை வழங்கியுள்ளனர்.

இந்த நாடு பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீள வேண்டுமானால், அந்த ஆதரவு மிகவும் முக்கியமானது. வங்குரோத்து நிலையிலிருந்து விடுபட்டு கௌரவமாக வாழக்கூடிய நாட்டை கட்டியெழுப்புவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More