June 5, 2023 11:49 am

அலி சப்ரி ரஹீம் எம்.பி. விடுவிப்பு! – 75 இலட்சம் ரூபா அபராதம்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

மூன்றரைக் கிலோகிராம் தங்கத்துடன் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய வேளை கைதான முஸ்லிம் ஐக்கிய தேசியக் கூட்டமைப்பின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்கப் பிரிவு அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டிருந்தார்.

ப்ளை டுபாய் விமான சேவைக்குச் சொந்தமான எப்.இசட் 547 ரக விமானம் மூலம் மத்திய கிழக்கு நாடொன்றில் இருந்து அவர் நாடு திரும்பியிருந்தார்.

இதன்போது, அவர் கட்டுநாயக்க விமானத் தள பிரபுக்கள் முனையத்தில் வைத்து கைதாகியிருந்தார்.

அவரிடமிருந்து ஆறு கோடி ரூபா பெறுமதியான மூன்றரைக் கிலோகிராம் தங்கம் கைப்பற்றப்பட்டது.

அவரிடம் சுங்கப் பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணைகளை முன்னெடுத்தனர்.

அதன்பின்னர் 75 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்ட பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்