Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ரயில் மோதி இரண்டு இளைஞர்கள் சாவு!

ரயில் மோதி இரண்டு இளைஞர்கள் சாவு!

0 minutes read

கையடக்கத்தொலைபேசியில் பேசிக்கொண்டு ரயில் மார்க்கத்தில் நடந்து சென்ற இரண்டு இளைஞர்கள் ரயில் மோதி உயிரிழந்துள்ளனர்.

இந்தப் பரிதாப சம்பவம் வெயாங்கொடை – வத்துருவ ரயில் நிலையத்துக்கு அருகில், இன்று அதிகாலை 5.45 அளவில் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த இரு இளைஞர்களின் வீடுகளும் ரயில் மார்க்கத்துக்கு அருகாமையில் அமைந்துள்ளது எனவும், அவர்கள் இன்று காலை சுற்றுலா செல்வதற்குத் தயாராகி வத்துருவ ரயில் நிலையத்தை நோக்கிச் சென்றுள்ளனர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

எனினும், இருவரும் கையடக்கத்தொலைபேசியில் பேசிக் கொண்டு நடந்து சென்ற போது, பதுளையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ரயில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

வெயாங்கொடை – வத்துருவ பிரதேசத்தைச் சேர்ந்த 18 மற்றும் 19 வயதுடைய இளைஞர்களே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More