அமெரிக்க மேற்கு கடற்கரை மாநிலங்கள் முழுவதும் பரவி வரும் காட்டுத்தீயால் 30 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஒரேகானில் மட்டும் பலரைக் காணவில்லை என்றும் பாரிய இறப்பு சம்பவத்திற்கு அரசாங்கம் தயாராக இருக்க வேண்டும் என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஒரேகான், கலிபோர்னியா மற்றும் வொஷிங்டனில் மூன்று வாரங்களாக பரவிவரும் தீயானது மில்லியன் கணக்கான ஏக்கர் நிலத்தை எரித்ததோடு, ஆயிரக்கணக்கான வீடுகளையும் அழித்து வருகிறது.
இதன் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
சமீபத்திய நிலைமை குறித்து விளக்கமளிக்க எதிர்வரும் திங்கட்கிழமை கலிபோர்னியாவிற்கு வருகை தரும் ஜனாதிபதி ட்ரம்ப், நேற்று சனிக்கிழமை இந்த காட்டுத்தீக்கு மோசமான வன நிர்வாகத்தின் செயற்பாடே காரணம் என குற்றம் சாட்டியிருந்தார்