செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்களை குறிவைத்து ஈராக் பகுதியில் சவுதி–அமெரிக்கா வான்வழித் தாக்குதல்!

ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்களை குறிவைத்து ஈராக் பகுதியில் சவுதி–அமெரிக்கா வான்வழித் தாக்குதல்!

1 minutes read

ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுக்களை இலக்காகக் கொண்டு, ஈராக் பகுதியில் சவுதி அரேபியாவும் அமெரிக்க மத்திய கட்டளையும் இணைந்து வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சவுதி அரேபிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, இன்று புதன்கிழமை (29) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட இந்த இராணுவ நடவடிக்கை, அண்மையில் சவுதி அரேபியாவின் முக்கிய பகுதிகளை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல்களுக்கு எதிரான பதிலடி நடவடிக்கையாக அமைந்துள்ளது.

ஈராக் எல்லைப் பகுதிகளில் இருந்து ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுக்கள் பல ட்ரோன்களை ஏவி, சவுதியின் தலைநகர் ரியாத் மற்றும் கிழக்கு மாகாணங்களில் அமைந்துள்ள முக்கிய பெட்ரோலிய உற்பத்தி மற்றும் சேமிப்பு நிலையங்களைத் தாக்க முயன்றதாக சவுதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும், அந்த ட்ரோன் தாக்குதல்கள் சவுதி அரேபியாவின் மேம்பட்ட வான் பாதுகாப்பு அமைப்புகளால் முறியடிக்கப்பட்டதாகவும், பல ட்ரோன்கள் இலக்கை அடையும் முன்பே இடைமறித்து அழிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, சவுதி அரேபியா தனது பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மேற்கொண்ட நடவடிக்கையாக இந்த வான்வழித் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக கூறியுள்ளது.

“நாங்கள் பிராந்தியத்தில் மோதலை விரும்பவில்லை. ஆனால், எங்கள் நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு எதிராக மேற்கொள்ளப்படும் எந்தவொரு தாக்குதலுக்கும் உரிய பதிலடி வழங்கப்படும்” என சவுதி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் பிராந்தியத்தில் ஏற்கெனவே நிலவி வரும் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. குறிப்பாக ஈரான் ஆதரவு பெற்ற குழுக்களுக்கும், வளைகுடா நாடுகளுக்கும் இடையிலான மோதல் சூழல் மீண்டும் கவனம் பெற்றுள்ளது.

இதற்கிடையில், ஈராக் பிரதமர் அலி அல்-சைதி, இந்த விவகாரம் தொடர்பாக சவுதி அரேபியாவுக்கு நாளை வியாழக்கிழமை பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை சமநிலையில் வைத்துக்கொள்ளும் நோக்கில் இந்த சந்திப்பு இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனது நாட்டின் நிலப்பரப்பை பயன்படுத்தி, அண்டை நாடுகளுக்கு எதிராக தாக்குதல்கள் நடத்தப்படுவதை அனுமதிக்காது என ஈராக் அரசாங்கம் ஏற்கெனவே தெரிவித்துள்ளது. நாட்டின் இறையாண்மையை பாதுகாப்பது முக்கியம் என்றும் ஈராக் இராணுவம் வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில், ஈரான் ஆதரவு பெற்றதாகக் கூறப்படும் “ஈராக்கின் இஸ்லாமிய எதிர்ப்பு” அமைப்பு, சவுதி அரேபியாவின் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளது.

சவுதி தரப்பின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும், சவுதி மீது நடத்தப்பட்டதாக கூறப்படும் ட்ரோன் தாக்குதல்களுக்கும் தங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் அந்த அமைப்பு அறிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.