கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்த நடிகை சமந்தா பற்றி ஏராளமான வதந்திகள் பரவி வருகின்றன. குழந்தை பெற்றுக்கொள்ள மறுத்தார், கருக்கலைப்பு செய்தார், இன்னொருவருடன் தொடர்பு இருந்தது என்றெல்லாம் டோலிவுட் வட்டாரத்தில் பேசி வருகிறார்கள். இதனால் நடிகை சமந்தா மன அழுத்தத்தில் இருக்கிறாராம்.
இந்நிலையில், மன அழுத்தத்தை போக்க, நடிகை சமந்தா தனது தோழியுடன் இணைந்து ஆன்மீக சுற்றுலா சென்றுள்ளார். பத்ரிநாத், கேதர்நாத், கங்கோத்ரி உள்ளிட்ட இடங்களில் உள்ள கோவில்களுக்கு அவர்கள் சென்றுள்ளனர். அங்கிருந்து திரும்பிய பின் அவர் நடிப்பில் கவனம் செலுத்த உள்ளாராம்.
ஏற்கனவே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, ‘சகுந்தலம்’ போன்ற படங்களில் நடித்து முடித்துள்ள சமந்தா, தற்போது மேலும் 2 புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். அந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் விரைவில் தொடங்க உள்ளது.