தேவையானவை
உருளைக்கிழங்கு – 3 (வேகவைக்கவும்)
கம்பு – அரை கப் (வேகவைக்கவும்)
பிரெட் – 2 ஸ்லைஸ்
பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கவும்)
சீரகத்தூள் – அரை டீஸ்பூன்
உப்பு – அரை டீஸ்பூன்
எண்ணெய் – ஒரு கப் (பொரிக்க)
கரைத்து வைக்க :
கார்ன்ஃப்ளார் – கால் கப்
மைதா – கால் கப்
மிளகு – கால் டீஸ்பூன்
செய்முறை:
பிரெட்டைத் தண்ணீரில் நனைத்துப் பிழிந்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் உருளைக்கிழங்கு, வேகவைத்த கம்பு, பிரெட், நறுக்கிய பச்சை மிளகாய், சீரகத்தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்துப் பிசைந்து சிறிய உருண்டைகளாகப் பிடித்து வைக்கவும். இன்னொரு சிறிய பாத்திரத்தில் கார்ன்ஃப்ளார், மைதா மாவு, மிளகுத்தூள் ஆகியவற்றைக் கொஞ்சம் தண்ணீர்விட்டுக் கரைத்து வைக்கவும். பின்னர், பிடித்து வைத்த உருண்டைகளைக் கைகளில் தட்டையாகத் தட்டி, கரைத்து வைத்திருக்கும் மாவுக் கலவையில் தோய்க்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். தவாவில் எண்ணெய்விட்டு இதை வறுத்தும் எடுக்கலாம்.
நன்றி-தினகரன்