செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மகளிர் சருமத்தில் கரும்புள்ளிகளை நீக்கும் செம்பருத்தி பூ பேஸ் பேக்

சருமத்தில் கரும்புள்ளிகளை நீக்கும் செம்பருத்தி பூ பேஸ் பேக்

1 minutes read

வெறும் கூந்தல் வளர்ச்சி, சருமத்திற்கு மெருகேற்றும் மலர் என்பதையும் தாண்டி பல்வேறு விதமான மருத்துவப் பயன்கள் கொண்டுள்ளது செம்பருத்தி.

தேவையானவை:

செம்பருத்தி பூ – 1
தயிர் – 1 டீஸ்பூன்
முல்தானி மெட்டி – 2 டீஸ்பூன்
ரோஜா பூ – 1

முதலில் ரோஜா மற்றும் செம்பருத்தி இதழ்களை சேர்த்து அரைத்துக்கொள்ளவும். பின்பு அதில் தயிர் மற்றும் முல்தானி மெட்டி கலந்து முகத்தில் தடவவும். 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவினால் முகம் மிருதுவாகும். கரும்புள்ளிகள், அழுக்குகள் நீங்கி ‘பளிச்’ என்று மாறும்.

செம்பருத்தி பூ. இலை இரண்டுமே சருமத்துக்கும் கூந்தலுக்கும் அழகை தருவதில் அதிக பங்குவகிக்கின்றன. செம்பருத்தி பூவை இதழ்களை தனியே பிரிக்காமல் அப்படியே காயவைத்து பொடித்து வைத்துகொள்ள வேண்டும்.

செம்பருத்தி பூ பொடி – 3 டீஸ்பூன்
பாசிபயறு மாவு – 3 டீஸ்பூன்
பால் – தேவைக்கு

இந்த மூன்றையும் நன்றாக கலந்து பேஸ்ட் போல் குழைத்து முகம், கழுத்து, கை, கால்கள் என்று அனைத்து இடங்களிலும் தேய்த்து 30 நிமிடங்கள் வரை ஊறவைக்கவும். பிறகு மிதமான நீரில் முகத்தை கழுவி வந்தால் முகத்தில் எண்ணெய் பசை நீங்கும். ஈரப்பதம் சீராக இருக்கும். சருமம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். எப்போதும் முகத்தில் தனி தேஜஸ் இருக்கும்.

நன்றி | மாலை மலர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.