Tuesday, March 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் காந்தியும் கனவுகளும் | பா.உதயன்

காந்தியும் கனவுகளும் | பா.உதயன்

1 minutes read
காந்தி 150: எழுத்தாளர் காந்தி | காந்தி 150: எழுத்தாளர் காந்தி -  hindutamil.in

காந்தியை ஒரு நாள்
கனவில் கண்டேன்
எப்படி இருக்கிறது
இந்தியா என்றார்

நீங்கள் நேசித்த
மூன்று குரங்குகள்
போல் இல்லை என்றேன்

சாதி மதம் என்று
சண்டைகள்
இல்லையா என்றார்

நீங்கள் பொய் சொல்லி
விட்டீர்கள் தாத்தா
கர்ஜனங்கள் உங்கள்
பிள்ளைகள் என்று

கடைசி வரை
ஒத்துக்க மாட்டானாம்
காவிக்குள் புகுந்து
இருக்கும் சாமிமார்

இன்றும் கூட
கண்ணகி ஒருத்தி
கற்பழித்து இறந்திருக்கிறாள்
தாத்தா

பிறந்த இடம் போய்
பார்த்தீர்களா தாத்தா
பத்தி எரிந்தது தாத்தா
ஒரு நாள்
பாடுபட்டு நீங்கள்
கட்டிய ஐக்கியம்

செத்து விழுந்தது
மானிடம் தாத்தா
பாவர் மசூதியை
போய் பாருங்கள்

உங்கள்
சத்திய சோதனையை
அந்த புனித மண்ணில்
புதைத்து விட்டனர்

நேரம் இருந்தால்
டெல்லிக்கு போய்
கேழுங்கள் தாத்தா
ஊழலை ஒழித்து
விட்டீரா என்று

கவனம் தாத்தா
டெல்லிகாரன்
முன்னம் போல் இல்லை
இன்னும் ஒரு முறை
நீங்கள் இறக்க வேண்டாம்

1927 நினைவு
இருக்கிறதா தாத்தா
ஈழத் தமிழனை
பார்க்க வந்தீர்கள்

இவனையும்
இவன் கனவுகளையும்
உங்கள் கைத் தடியாலே
கொன்று விட்னர் தாத்தா

தாத்தா நீங்கள்
கதிர் வேட்டி நெய்த
கைத்தறியில்
இவர்கள் இப்போ
கர்மங்களை நெய்து
கொண்டு இருக்கிறார்கள்

இன்னும்
ஓர் மஹாபாராதத்துக்காக

நேருவை கண்டால்
சொல்லுங்கள் தாத்தா
அவர் இரவில்
வாங்கிய சுதந்திரத்தை
பகலில்
தொலைத்து விட்டான் என்று

காதையும் வாயையும் கண்ணையும்
பொத்தியபடி காந்தி தாத்தா
கண்ணுக்கு எட்டா தூரம்
போய் மறைந்தார் .

பா.உதயன்✍️

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More