Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் பாரததத்தாய் உலகில் வீரியத்தின் வடிவம்! | கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

பாரததத்தாய் உலகில் வீரியத்தின் வடிவம்! | கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

1 minutes read

குருதியொடு கண்ணீர்
கொட்டியது மண்ணில்
வெறிகொண்ட வெள்ளை
ஆடியது வேட்டை  !

பறிகொடுத்தார் உயிரை
பாரதத்தை மீட்க
நெறிநின்றார் மக்கள்
நெடுவெளிச்சம் கண்டார் !

தாய்மண்ணை மீட்க
தாம்கண்ட கஷ்டம்
வாழ்வெல்லாம் மக்கள்
மனவுறுதி ஆச்சு !

யாரெதிர்த்து வரினும்
போரெழுந்து வரினும்
வீரமுடன் எதிர்த்து
விரட்டிடுவார் மக்கள் !

சுதந்திரத்தின் விடியல்
குடியரசாய் விரிந்து
மக்களது ஆட்சி
மலர்ந்ததுவே சிறப்பாய்  !

பாரததத்தாய் உலகில்
வீரியத்தின் வடிவம்
பண்பாடி நாங்கள்
கொண்டாடி மகிழ்வோம்  !

கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா (மெல்பேண் – அவுஸ்திரேலியா)

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More