Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் இதற்கு தான ஆசைப்பட்டாய் மனிதா | பா.உதயன்

இதற்கு தான ஆசைப்பட்டாய் மனிதா | பா.உதயன்

1 minutes read

எல்லாமே எதுகுமே
கொஞ்சக் காலம் தான்
இதுக்காக மனிதருக்குள்
இத்தனை பிரிவா
இத்தனை அழிவா

இருப்பதெல்லாம்
போகும் என்று
அறியவில்லையா
இதற்கு தான
ஆசைப்பட்டாய்
மனிதா

வந்த சொத்து
இருக்கும் என்று
கனவு கண்டாய்
அது வரும் வழியே
போகும் என்று
அறியவில்லையா

அண்டமும் அகிலமும்
கொஞ்சக் காலம் தான்
அது சுத்துவதும் சுழலுவதும்
கொஞ்சக் காலம் தான்

ஆசை பாசம்
எல்லாம் கூட
கொஞ்சக் காலம் தான்
மூச்சு அடங்கிக் போனா
அது சும்மா வேஷம் தான்

நிரந்தரமே எல்லாம்
என்று நினைத்திருந்தாயா
இந்த உசிரு கூட
உனக்கு சொந்தம்
கொஞ்சக் காலம் தான்

முதுமை என்று
வந்து விட்டால்
முழுதும் அடங்கும்
அட போகும் போது
கூட வரும் நாலு தடி தான்

வந்த வழி தெரிகிறது
போக வழி இல்லை
எந்த வழி போவதென்று
இன்னும் குழப்பம் தான்

பாசமும் பணமும் கூட
நிரந்தரமில்லை
இது பகல் இரவு போல வரும்
காலம் போலத் தான்

எல்லாமே தெரிந்தவர் போல்
சில மனிதர் பேசுவார்
எதுகுமே தெரியாதென்ற
சூத்திரம் அறியார்

எல்லாமே எதுகுமே
கொஞ்சக் காலம் தான்
நமக்கு இருப்பதெல்லாம்
கொஞ்சக் காலம் தான்
அட நாம கூட
கொஞ்சக் காலம் தான்

அந்த நாடகத்தில்
நம்ம வாழ்வு
கொஞ்சக் காலம் தான்
இது போகு மட்டும் ஆடுவது
நம்ம வாழ்வு தான்
இதை போட்டு
உடைத்து வாழுவதும்
நம்ம வாழ்வு தான்.

பா.உதயன் ✍️

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More