செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் கருஞ்சட்டை வீரர்கள் | கேசுதன்

கருஞ்சட்டை வீரர்கள் | கேசுதன்

0 minutes read

 

வெடி சுமந்த உடலோடு
கனவுகளின் விடியலுக்காய்
கயவர் நெஞ்சுடைக்க
தீப்பிழம்பானாய்

கதிரவன் சாயல் கண்டு
கரும் புலியாகி எம்மவர்
வலிசுமந்து கந்தக புகையூடே
கரைந்தது நாமறிவோம்

காலம் எமக்களித்த
உயிராயுதம் -அது
வெற்றியின் ரகசியம்

என்னவன் ஊட்டிய
இறுதிச்சோற்றில் பற்றியது
பெரும் பாசப்போர்

கரிகாலன் கண்கள் கனந்தும்
வேளை கையசைத்து
விழி வழி மறைந்த
மாசற்ற வேங்கைகள்

என் தலைவன் கட்டிய
படைகளின் துருப்புக்களாய்
ஒளிர்ந்த கருஞ்சட்டை
வீரர்கள்

தாகங்கள் மாறாத தேகங்கள்
பெரும் புயலாகி கரும் புகையாகிய
சரிதங்கள்

வெற்றி சாவுகளை நோக்கிய
பயணம் விடுதலை
நெருப்பாகிய -இவர்
காவியம்

ஒற்றை உடலோடு ஒட்டிய
ஓராயிரம் கந்தக துகள்கள்
நய வஞ்சகர் குரல்வளை
கிழிக்க கருஞ்சட்டை
புணைந்த கரும்புலிகள்

புல்லரித்துப்போகும்
கரும் புலியின் கதைக்கேட்டு

கேசுதன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.