தன் ஆத்மார்த்தமான வாசிப்பினால் எங்கள் இசையுலகில் தடம் பதித்த. மிருதங்க, தப்லா கலைஞர் சதா வேல்மாறன் அவர்களின் இழப்பு தாங்க முடியாதது இவ்வாறு யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும் மூத்த சமூகவியல் பேராசிரியருமான என். சண்முகலிங்கன் தெரிவித்துள்ளார்.
“மிருதங்க,தப்லா கலைஞர் சதா வேல்மாறனின் இழப்பு குறித்து அவர் வெளியிட்டுள்ள அஞ்சலிக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வித்துவச்செருக்கு கிஞ்சித்தும் இல்லாத வித்துவம் வேல் மாறன்.
பக்குவமான பழக இனியஆளுமையாய் எங்கள் பாடல்களின் உயிர்ப்புக்கு அரணான லய ஞானக்கலைஞர் .
என் ஆக்க இசை அரங்குகளில் அவரோடு இசைந்த பொழுதுகள் ஈடிலாதவை
என்பேன்.எங்கள் இசை வாழ்வுடன் கலந்துவிட்ட அவரின் மேலான நினைவுகளை காத்திடுவோம்;அவர் ஆத்ம சாந்திக்கான பிரார்த்தனையில் இசைந்திருப்போம்!..” இவ்வாறு மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.