Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் சோ.பாவின் படைப்புலகம் | மெய்நிகர் உரையாடல்

சோ.பாவின் படைப்புலகம் | மெய்நிகர் உரையாடல்

1 minutes read

வணக்கம் இலண்டன் இணையத்தளத்தின் ஏற்பாட்டில், ஈழத்துக் கவிஞர் சோ. பா என்றழைக்கப்படும் சோ. பத்மநாதனின் படைப்புலகம் குறித்த மெய்நிகர் ஊடக உரையாடல் நிகழ்வு நாளை இடம்பெறவுள்ளது.

அதில் ம.பா. மகாலிங்கம், சி. கருணாகரன், ஸ்ரீ. கணேசன், கலாநிதி க. இரகுபரன் ஆகியோர் சோ.பாவின் படைப்புக்கள் குறித்து உரைகளை நிகழ்த்தவுள்ளனர்.

வணக்கம் இலண்டன் இணையத்தளத்தின் ஏற்பாட்டில் ஈழத்தின் படைப்பாளுமைகள், இலக்கியவாதிகள், இலக்கியங்கள் குறித்த நிகழ்வாக தலைமுறை தாண்டிய பயணம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதில் பத்தாவது நிகழ்வாக இடம்பெறும் சோ.பாவின் படைப்புலகம் குறித்த நிகழ்சியை மாதவி சிவலீலன், சுப்ரம் சுரேஷ் மற்றும் சுகி கணேசலிங்கம் ஆகியோர் வழிப்படுத்துநர்களாக நெறிப்படுத்துகின்றனர்.

நிகழ்வின் அழைப்பிதழ் இதோ!

இம்மாதம் 31ம் திகதி
31/10/2021
ஐரோப்பிய நேர மாற்றத்தால் பிரித்தானியாவில் 12 மணிக்கும் ஐரோப்பாவில் பிற்பகல் 1 மணிக்கும் ஆரம்பமாகும்…
இலங்கை நேரம் மாலை 5.30 மணி

ஈழத்துக்கவிஞர் சோ. பத்மநாதனின் படைப்புலகம்
உரைகள் | பாடல்கள் | ஆற்றுகைகள்

மெய்நிகர் அரங்கு
31/10/2021 ஞாயிற்றுக்கிழமை
08.00 மணி – கனடா
12.00 மணி – பிரித்தானியா
13.00 மணி – ஐரோப்பா
17.30 மணி – இலங்கை, இந்தியா
23.00 மணி – சிட்னி

இணைப்பு:
https://us02web.zoom.us/j/84888859828
நுழைவு எண்:
848 8885 9828
கடவுச்சொல் தேவையில்லை

நிகழ்வில் கலந்துகொள்ள உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்…

நன்றி
வணக்கம் இலண்டன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More