Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் சமாளித்து வாழ்தல் | சமரபாகு சீனா உதயகுமார்

சமாளித்து வாழ்தல் | சமரபாகு சீனா உதயகுமார்

1 minutes read

இப்பவெல்லாம்
ஒரு பெண் உருக்குலையும் போது
யாரோ ஒரு பெண்ணென்றுதான்
அப்பால் அகல்கின்றனர்

பூலான் தேவி முதற் பாகம்

இப்பவெல்லாம்
ஒரு பெண் உருக்குலையும் போது
யாரோ ஒரு பெண்ணென்றுதான்
அப்பால் அகல்கின்றனர்

ஒரு பிரபாகரனின் அருமை
ஒரு பூலான்தேவியின் அருமை
இப்போதுதான் எவருக்கும்
புரிய ஆரம்பிக்கின்றன..!

இனி
இன்னும் இன்னும்
எத்தனை எத்தனையோயோ
தெரியவில்லை…?

அவர்களில் ஒருவர்
என் மனைவியாக,
என் மகளாக,
என் சோதரியாக,
என் அம்மாவாக
என யாராகவும் இருக்கக்கூடும்
என யாருமே நினைப்பதில்லை…

சமாளித்து வாழ்பவரை
சரியானவர் என்றும்
சுட்டிக்காட்டி வாழ்பவரை
சரியில்லாதவர் என்றும்
மட்டம் செய்து தேய்ந்து போகிறது உலகு..!

“சமாளித்து வாழ்தல்” என்பது
வீழ்தலின் அடையாளமன்றி
வேறெதுவுமில்லை பராபரமே..!

-சமரபாகு சீனா உதயகுமார்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More