0
விடிந்திடுமோ…
எங்கள்
குடிசையிலும்
வெளிச்சம் வந்து விழுந்திடுமோ..
குப்பி விளக்கினது
ஒளி தூர்ந்து போகிறதோ…
தப்பிதமோ வரலாறு
தவறாகிப் போய்விடுமோ…
இன்னந் துயிலுதியோ!…
உன் விளக்கைத் தூண்டுதற்கு
யாரை நம்பி நீ கிடந்தாய்…
இன்னந் துயிலுதியோ!…
நம்பிக்கை குறைவதற்கு
ஞாயமில்லை நீஎழுந்தால்…
சூரியனைக் கண்டிடலாம்
எழு!
-சண்முகபாரதி