விகாரைகளின் பூமியில்,
இராணுவத்தின் தேசத்தில்,
இனப்படுகொலை புரிந்த
இராணுவம் தெருவெல்லாம்
அணிவகுக்கிறது…
சிலவேளை, சொற்கள்
வீரியமாக இருக்கலாம்…
மொழிபெயர்க்கப்பட்டால்
நான் கைது செய்யப்படலாம்…
அடக்கம் செய்யப்படாத
பிணங்களின்
வாடையையும்,
பெருக்கெடுத்தோடிய
குருதியின்
துர்நாற்றத்தையும்,
கிழிந்து தொங்கிய
சதைகளின் துடிப்பையும்
இந்த அணிவகுப்பு
நினைவுபடுத்துகிறது…
ஓரினத்தின்
குருதியின் நிறம் – இந்த
பச்சைச் சீருடையில்
ஒளிந்து கிடக்கிறது…
சிவிலுக்குப் பதிலாக
சீருடைச் சிப்பாய்கள்…
பொது நிருவாகத்தில்
போர்க்குற்றவாக்ரிளிகள்…
ஒருவேளை, புத்தன்
கண்கள் திறந்தால் – தன்
வெண்ணிறச் சிலையில்
இரத்தக்கறை கண்டு
மீண்டும் கண்களை
மூடிக்கொள்வான்…
இதை அதிகம்
பகிர்ந்துவிடாதீர்கள்…
அரசுக்கெதிரான
கவிப்புரட்சி என்று
கைது செய்துவிடுவார்கள்…
நல்லவேளை
இப்போது நான்
பர்மாவில் இல்லை!!!
க்ரி