இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வில் அமெரிக்கா கொண்டுவந்திருக்கும் தீர்மானம்இ தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்திசெய்யவில்லை என்றும்இ இதனால் உலகத் தமிழர்கள் பெரும் அதிருப்திக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்றும் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் அறிக்கை விடுத்துள்ளார்.
அடுத்து இந்தத் தீர்மானத்தில் 13-ஆவது சட்ட திருத்தத்தின்படி வடக்கு மாகாண முதலமைச்சருக்குத் தேவையான அதிகாரத்தையும் நிதியையும் வழங்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. 13-ஆவது சட்டத்திருத்தத்தையே உச்சநீதிமன்ற ஆணையின் மூலம் ராஜபக்ஷ சாகடித்து விட்டார். இப்போது 13-ஆவது சட்டத்திருத்தமே இல்லை.அதன்படி தமிழர்களுக்கு அதிகாரம் வழங்குவது என்பது நடக்கப்போகாத ஒன்றாகும்.