Thursday, March 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் அமெரிக்காவின் தீர்மானம் குறித்து பழ. நெடுமாறன் கண்டனம்அமெரிக்காவின் தீர்மானம் குறித்து பழ. நெடுமாறன் கண்டனம்

அமெரிக்காவின் தீர்மானம் குறித்து பழ. நெடுமாறன் கண்டனம்அமெரிக்காவின் தீர்மானம் குறித்து பழ. நெடுமாறன் கண்டனம்

1 minutes read

இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வில் அமெரிக்கா கொண்டுவந்திருக்கும் தீர்மானம்இ தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்திசெய்யவில்லை என்றும்இ இதனால் உலகத் தமிழர்கள் பெரும் அதிருப்திக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்றும் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் அறிக்கை விடுத்துள்ளார்.

அவ்வறிக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:
ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள் இணைந்து கூட்டாகக் கொண்டுவந்திருக்கும் தீர்மானம் புதிய மொந்தையில் தரப்படும் பழைய கள்ளே ஆகும். ஐ. நா. மனித உரிமை ஆணையர் பரிந்துரைத்தபடி சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்தப்படுவதற்கு நிபந்தனை விதிக்கப்பட்டிருக்கிறது.இலங்கை அரசே நம்பகத்தன்மையும் உருப்படியான நடவடிக்கைகளும் கொண்ட விசாரணைக்குழுவை அமைத்து செயற்பட தவறினால் சுதந்திரமான நம்பகத்தன்மையுள்ள சர்வதேச விசாரணை நடத்த வேண்டிய அவசியம் ஏற்படும் என இத்தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
ஏற்கெனவே கடந்த 4 ஆண்டுகளில் இரண்டு முறை அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தின்படி ராஜபக்ஷ அரசே இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு விசாரணை நடத்தவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யவும் வேண்டுமென வற்புறுத்தப்பட்டது. ஆனால் இத்தீர்மானங்களை ராஜபக்ஷ அரசு கொஞ்சமும் சட்டை செய்யவில்லை. மீண்டும் அவருக்கு இரண்டாண்டு காலம் அவகாசம் கொடுப்பது என்பது இலங்கையில் எஞ்சியிருக்கும் தமிழர்களை அழிப்பதற்கு துணை போவதாகும். இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

அடுத்து இந்தத் தீர்மானத்தில் 13-ஆவது சட்ட திருத்தத்தின்படி வடக்கு மாகாண முதலமைச்சருக்குத் தேவையான அதிகாரத்தையும் நிதியையும் வழங்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. 13-ஆவது சட்டத்திருத்தத்தையே உச்சநீதிமன்ற ஆணையின் மூலம் ராஜபக்ஷ சாகடித்து விட்டார். இப்போது 13-ஆவது சட்டத்திருத்தமே இல்லை.அதன்படி தமிழர்களுக்கு அதிகாரம் வழங்குவது என்பது நடக்கப்போகாத ஒன்றாகும்.

அமெரிக்காவின் தீர்மானம் தமிழர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் தீர்மானமாகும். இந்தத் தீர்மானத்திற்கு திருத்தங்கள் கொண்டு வந்து ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க உதவ வேண்டியது உலக நாடுகளின் கடமையாகும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More