தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனுக்கும் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் அடுத்த கூட்டமைப்பின் தலைவராக கருதிக் கொண்டிருக்கும் சுமந்திரனுக்கும் இடையில் முறுகல் நிலை உச்ச கட்டத்தை அடைந்துள்ளது.
கடந்த மாதம் புலிகளின் திருமலை அரசியல் துறைப் பொறுப்பார் எழிலனின் மனைவி அனந்தியை ஜெனீவா அழைத்துச் சென்ற கூட்டமைப்பு எம்.பி சுமந்திரன், அனந்தியை வெளிநாட்டு ராஜதந்திரிகளுடன் கதைக்க அனுமதிக்கவில்லை.
அத்துடன் சுமந்திரன் சரியான முறையில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி பேசவுமில்லை என அனந்தி குற்றம் சாட்டியுள்ள வேளையில் இவ் முறுகல் நிலை தோன்றியுள்ளது.
யாழில் இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் கூறியுள்ளார் அனந்தி மேற்படி கூறியுள்ளார்.