0
இன்று மாலை 4:00 மணிக்கு பொதுநலவாய செயலகம் முன்பாக நடைபெற்ற ஆர்பாட்டத்தில் பிரித்தானிய உறவுகள் கலந்துகொண்டு மகிந்தவுக்கு எதிராக கோசம் எழுப்பினர்.
தமிழ் இனப் படுகொலை சூத்திரதாரி மஹிந்த ராஜபக்ஷ இன்று இலண்டன் பொதுநலவாய நாடுகளின் செயலகத்தில் மாலை 4.00 மணிக்கு நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்பட்டு அதற்கெதிராக பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.
மாநாடு நடைபெற உள்ள மல்பரோ-ஹவுக்குமுன்பாக, எம் உறவுகளை கொன்றொழித்து யுத்தக்குற்றச் செயல்களில் ஈடுபட்ட மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டப் பேரணி நடைபெற்றது..