தனக்குதானே தலையில் ஆணிகளை அடித்துகொண்ட நபரொருவர் அதிசயமாக உயிர்பிழைத்துள்ள சம்பவமொன்று சீனாவில் இடம்பெற்றுள்ளது.
பெயர் வெளியிடப்படாத 69 வயதான சீன நபரொருவர் தனது தலையில் 10 செ.மீ (4 அங்குலம்) நீளமான 3 ஆணிகளை அவரே அடித்துள்ளார். 3 மாதங்கள் வரையில் புஜியான் மாகாணத்திலுள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த குறித்த நபர் கடந்த வியாழக்கிழமை சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார்.
இவரது உயிரைக் காப்பாற்றிய போதிலும் 3 ஆணிகளையும் அகற்றுவது ஆபத்தாக அமையலாம் என்பதற்காக அவற்றினை அவரது தலையிலிருந்து வைத்தியர்கள் அகற்றவில்லை.
மேற்படி நபர் தனக்குத்தானே இவ்வாணிகளை அடித்திருக்க வாய்ப்பில்லை என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும் இச்சம்பவம் குறித்து இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை.