செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home ஆன்மிகம் விநாயகரின் எந்த பெயரை சொல்லி வழிபட்டால் என்ன பலன் கிடைக்கும்?

விநாயகரின் எந்த பெயரை சொல்லி வழிபட்டால் என்ன பலன் கிடைக்கும்?

1 minutes read

எந்த செயலை துவங்குவதற்கு முன்பும் முதன்மை தெய்வமாக வணங்கப்படும் விநாயகருக்கு பல திருநாமங்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றிற்கும் ஆழ்ந்த அர்த்தங்கள் உள்ளன. எந்த திருநாமத்துடன் அருள்பாலிக்கும் விநாயகரை வழிபட்டால் என்ன பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

இந்து மதத்தில் உள்ள ஒவ்வொரு கடவுளும் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறார்கள். அவர்களின் குணங்கள், தன்மைகள், அந்த ரூபத்தை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் ஆகியற்றை பொருத்து இந்த பெயர்கள் வழங்கப்படுகின்றன. அப்படி முழு முதற் கடவுளான விநாயகப் பெருமானுக்கும் பல திருநாமங்கள் உள்ளன. இவற்றில் மிக முக்கியமான, பிரபலமான 10 திருநாமங்கள், அவற்றின் பொருள் மற்றும் அந்த திருநாமத்தை சொல்லி வழிபட்டால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

விநாயகரின் பெயர்களும், வழிபாட்டு பலன்களும் 

விநாயகர் :

நாயகர் என்றால் தலைவன் என்று பொருள். விநாயகர் என்றால் தனக்கு மேல் ஒரு தலைவன் இல்லாதவர். முதன்மையானவர் என்று பொருள். தலைமை, ஞானம் மற்றும் அதிகாரத்தை வழங்கக் கூடியவராக இவர் உள்ளார்.

கஜானன் :

கஜானன் என்றால் யானை முகத்தை கொண்டவர் என்று பொருள். புத்திசாலித்தனம், ஞானம், தனித்துவம் ஆகியவற்றை தரக் கூடியவர்.

விக்னஹர்த :

விக்ஹர்த என்ற பெயரில் விக்னம் என்றால் தடை அல்லது துன்பம் என்று பொருள். ஹர்த என்றால் அறுப்பவர் என்று பொருள். எந்த காரியத்தை துவங்கினாலும் அதிலுள்ள தடைகளை விலக்கக் கூடியவர். வாழ்க்கையில் இருக்கும் துன்பங்களை போக்கக் கூடியவர்.

லம்போதரா :

பானை போன்ற பெரிய வயிறினை உடையவர் என்று பொருள். இவரது வயிற்றில் அண்டங்கள் அனைத்தும் அடங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது. அதனால் நன்மை, தீமைகளை சமமாக கருதும் மனப்பக்குவத்தை தரக் கூடியவர்.

ஏகதந்தா :

ஒற்றை தந்தத்தை உடையவர் என்று பொருள். இது தியாகத்தின் அடையாளம் ஆகும். மகாபாரதம் எழுத தன்னுடைய தந்தத்தை உடைத்தவர்.

தூமகேது :

புகை சூழ்ந்த இடத்தில் இருப்பவர் என்று பொருள். தீமையை அழிப்பவராக இவர் கருதப்படுகிறார். விநாயகரின் சக்தி வாய்ந்த வடிவமாகவும் இத கருதப்படுகிறது.

சித்தி விநாயகர் :

வெற்றியை தரக் கூடியவர் என்று பொருள். இவரை வழிபட்டால் வெற்றிகள், நன்மைகள் அதிகம் கிடைக்கும் என்பது பொருள். சித்தி விநாயகர் என்ற திருநாமத்துடன் விநாயகர் பல இடங்களில் அருள்பாலிக்கிறார்.

பாலசந்திரா :

நெற்றியில் பிறை சந்திரனை அணிந்தவர் என்று பொருள். இவரை வழிபட்டால் மன அமைதி கிடைக்கும். சஞ்சலங்கள் விலகும். உணர்வுகளை கட்டுப்படுத்தும் திறன் கிடைக்கும்.

ஹேரம்பா :

தன்னை நம்பி சரணடைந்த பக்தர்களை பாதுகாப்பவர் என்று பொருள். இவர் வடமாநிலங்கள் சிலவற்றிலும், நேபாளம், திபெத் ஆகிய நாடுகளிலும் அதிகமாக அழைக்கப்படுகிறார்.

கணபதி :

கணங்களின் தலைவன் என்று பொருள். சிவ கணங்களின் தலைவர் இவரே என சொல்லப்படுகிறது. இவரை வழிபட்டால் நவகிரகங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறையும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.