லங்கா பிரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அத்தியாயம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை நடத்துவதற்கான நடவடிக்கைகளை ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் எடுத்துள்ளது.
இந்த விடயத்தை ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் ஊடக அறிக்கையொன்றின் மூலம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ளதாவது,
இப்போட்டித் தொடரில் பங்கேற்கும் வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் இன்று (24) முதல் ஒக்டோபர் 5 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை விண்ணப்பங்களை அனுப்ப முடியும்.
இதற்காக www.srilakacricket.lk எனும் இணையத்தளத்துக்கு பிரவேசிப்பதன் மூலம் விண்ணப்பத்தை பெற முடியும்.
எல்.பி.எல். கிரிக்கெட் போட்டித் தொடரின் வீரர்கள் தெரிவுக்கான வீரர்கள் வரைபு (player draft) ஒன்றை வெளியிட்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட சகல உள்நாட்டு வீரர்களும் விண்ணப்பிக்க தகுதி உடையவர்களாவர்.
மேலும், வெளிநாட்டு வீரர்கள் கீழ்காணும் விடயங்களை கொண்டிருத்தல் அவசியம். தமது நாட்டு தேசிய அணியில் விளையாடி இருத்தல், அல்லது முதற்தர கிரிக்கெட் போட்டிகள் விளையாடி இருத்தல், அல்லது பூரண அங்கத்துவம் பெற்ற நாடொன்றின் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் விளையாடி இருத்தல் போன்றன உள்ளடங்குகின்றன.
5 அணிகள் பங்கேற்கும் இப்போட்டித் தொடரில், குறித்தவொரு கிரிக்கெட் குழாமில் 14 உள்நாட்டு வீரர்களும் 6 வெளிநாட்டு வீரர்கள் அடங்கலாக 20 பேர் இடம்பெற வேண்டும்.