Thursday, April 18, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் ஆஸ்திரேலிய தடுப்பு முகாம் காவலாளிக்கு கொரோனா தொற்று: அகதிகளை விடுவிக்கக் கோரிக்கை

ஆஸ்திரேலிய தடுப்பு முகாம் காவலாளிக்கு கொரோனா தொற்று: அகதிகளை விடுவிக்கக் கோரிக்கை

1 minutes read

ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் தடுப்பு முகாமில் உள்ள காவலாளிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள தகவலை சுகாதாரத்துறை அதிகாரிகள் வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து, குடிவரவுத் தடுப்பில் உள்ளவர்களை விடுவிக்கமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

காவலாளிக்கும் தடுப்பில் உள்ளவர்களுக்கும் தொடர்பில்லை எனச் சொல்லப்பட்டு வந்த நிலையில், மற்றொரு காவலாளிக்கும் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் அதைத்தொடர்ந்து 35 முதல் 45 ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அகதிகள் நல வழக்கறிஞர்கள் தெரிவித்திருக்கின்றனர். அதே சமயம், இந்த தகவல் குறித்து ஆஸ்திரேலிய எல்லைப் படை இதுவரை எவ்வித பதிலையும்  தெரிவிக்கவில்லை. 

“தடுப்பு முகாம்களில் உள்ள பெரும்பாலானோர் மருத்துவ காரணங்களுக்காக கடல் கடந்த தடுப்பு முகாம்களிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு அழைத்து வரப்பட்டவர்கள்,” எனக் கூறுகிறார் தஞ்சக்கோரிக்கையாளர் வள மையத்தின் திட்ட மேலாளர் சதாப் இஸ்மாயில். 

இந்த நிலையில், குடிவரவுத் தடுப்பில் வைக்கப்பட்டுள்ள அகதிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்களை சமூகத்திற்குள் விடுதலைச் செய்யுமாறு தஞ்சக்கோரிக்கையாளர் வள மையம், ஆமென்ஸ்டி இன்டர்நேஷனல், மனித உரிமைகள் சட்ட மையம் உள்ளிட்ட 140 அமைப்புகள் ஆஸ்திரேலிய அரசு கோரிக்கை விடுத்துள்ளன. 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More