மெஹிதி மற்றும் அடனன் ஆகிய இருவரும் 15 வயதில் ஆபத்துகள் நிறைந்த தங்களது சொந்த நாட்டிலிருந்து வெளியேறி ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்தவர்கள் ஆவர்.
“என்னைப் பற்றிய முடிவை எனது தந்தையின் நண்பர் எடுத்தார்- பிறகு என்னை படகில் வைத்து அனுப்பினார்கள்,” எனக் கூறுகிறார் பிரிஸ்பேன் தடுப்பு முகாமில் உள்ள மெஹிதி. 2013ம் ஆண்டில் மெஹிதியும் அவரது உறவினரான அடனனும் தன்னந்தனியாக இந்தோனேசியா வந்தடைந்து மேலும் பல தஞ்சக்கோரிக்கையாளர்களுடன் அங்கிருந்து படகு வழியாக ஆஸ்திரேலியாவை வந்தடைந்திருக்கிறார்கள்.
படகில் வந்ததற்காக சுமார் 8 ஆண்டுகளாக இவர்கள் ஆஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், இவர்கள் குற்றவாளிகளா? அகதிகளா? அரசியல் பகடைக்காய்களா? என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறார் அல்ஜசீரா ஊடகத்தில் இதுதொடர்பாக கட்டுரையினை எழுதிய Zoe Osborne.
தாங்கள் ஆஸ்திரேலியாவை நோக்கி புறப்பட்ட படகு மிக பழையதாகவும் மரத்தால் ஆனதாகவும் இருந்ததாகக் கூறுகிறார் அடனன். “நான் திரும்பிச் செல்கிறேன் என அவர்களிடன் சொன்னேன். என்னால் முடியவில்லை என்றேன். என்னுடன் வந்த பிற மக்களும் கூச்சலிட இப்படகில் செல்லவில்லை எனக் கூச்சலிட்டனர். ஆனால், ஆட்கடத்தல்காரர்கள் எங்களது உடைமைகள் படகிற்குள் தூக்கிப் போட்டனர். பெரும் குழப்பமான சூழல் அது,” என்கிறார் அடனன்.
நான்கு நாட்கள் பயணித்துக்கு பிறகு, ஜுலை 21, 2013 அன்று ஆஸ்திரேலிய கடற்படை இவர்களது படகினை மறித்துள்ளது. தங்களை ஒரு தீவினை நோக்கி அழைத்து சென்றதாகக் கூறும் மெஹிதி, பின்னரே அது கிறிஸ்துமஸ் தீவு என்பதை அறிந்து கொண்டோம் என்கிறார்.
அத்தீவில் இறங்கிய ஒரு மணிநேரத்தில், எவரும் ஆஸ்திரேலியாவில் குடியமர்த்தப்பட மாட்டார்கள் என்ற செய்தியினை மெஹிதி, அடனன் மற்றும் இன்னும் பிற தஞ்சக்கோரிக்கையாளர்களிடம் ஆஸ்திரேலிய அதிகாரிகளிடம் தெரிவித்திருக்கின்றனர்.
இவ்வாறு படகு வழியாக ஆஸ்திரேலியாவில் தஞ்சமடையபவர்கள் பப்பு நியூ கினியாவில் உள்ள கடல் கடந்த தடுப்பு முகாமிற்கு அனுப்பப்படுவார்கள் என்ற அப்போதைய ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் முடிவு, மெஹிதியும் அடனனும் நடுக்கடலில் இருந்த போது நடைமுறைக்கு வந்திருக்கிறது.
இன்று 23 வயதாகி இருக்கும் நிலையில், தாங்கள் எப்போது புதிய வாழ்க்கையை தொடங்க அனுமதிக்கப்படுவோம் என்ற காத்திருப்புடன் மெஹிதியும் அடனனும் ஆஸ்திரேலிய தடுப்பு முகாமில் உள்ளனர்.