5
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவை 2022ஆம் ஆண்டு படுகொலை செய்த குற்றவாளி டெட்சுயா யமகமிக்கு ஜப்பானிய நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. குற்றவாளி தனது குற்றத்தை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.
தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் வைத்து அபே சுட்டுக் கொல்லப்பட்ட இச்சம்பவம் உலகளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.