கிளிநொச்சி இரணைமடு குளத்தின் மேலும் இரண்டு வான்கதவுகள் திறக்கப்படுகின்றது என நீர்பாசன திணைக்களம் தெரிவித்தள்ளது. ஏற்கனவே படிப்படியாக கதவுகள் திறக்கப்படும் என அறிவித்திருந்த நிலையில் 6 கதவுகள் திறக்கப்படுகின்றது.
கிளிநொச்சி இரணைமடு குளத்தின் நான்கு வான்கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளது எனவும் தாழ்நிலப்பகுதி மக்கள் அவதானமாக செயற்படுமாறும் கிளிநொச்சி மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. இரவு பெய்த பலத்த மழை காரணமாக நீர் வரத்து அதிகரித்தள்ளது. 36 அடி கொள்ளளவு கொண்ட இரணைமடு குளம் அடைவுமட்டத்தை அடைந்து 2.5 அங்குலம் வான்பாய்ந்து வந்தது. இந்த நிலையில் மேலும் நீர் வரத்து அதிகரித்தமையால் ஆரம்பத்தில் இரண்டு வான்கதவுகளையும் பின்னர் மேலும் இரு வான் கதவுகளையும் 6 அங்குலம் திறந்து விடப்பட்டுள்ளதாக நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
நீர் வரத்து மேலும் அதிகரிக்கும் சந்தர்ப்பத்தில் மேலும் அளவுமட்டத்தில் அதிகரிப்பு செய்யவோ அல்லது மேலும் கதவுகளை திறப்பது தொடர்பிலோ தீர்மானிக்கப்படும் எனவு்ம, இவ்விடயம் தொடர்பில் முழுமையான கண்காணிப்பு இடம்பெற்று வருவதாகவும் நீர்பாசன திணைக்களம் தெரிவித்தள்ளது.
இதேவேளை வெள்ள அனர்த்தம் தொடர்பான முன்னெச்சரிக்கைகள் ஏற்கனவே தொடர்ச்சியாக விடுக்கப்பட்டுவந்த நிலையில் பன்னங்கண்டி, முரசுமோட்டை, பரந்தன், ஊரியான், கண்டாவளை, உமையாள்பரம் உள்ளிட்ட பகுதி மக்களை அவதானமாக செயற்படுமாறு மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தி உள்ளது.
இதேவேளை இன்று காலை 6 மணி வாசிப்பின்படி கிளிநொச்சி நீர்பாசன குளங்களா கல்மடு குளம் 4 அங்குலமும், பிரமந்தனாறு குளம் 4 ஆங்குலமாகவும், கனகாம்பிகை குளம் 6 அங்குலமாகவும் வான் பாய்ந்து வருவதாக நீர்பாசன திணைக்களம் தெரிவிக்கின்றது
மேலும் இன்று காலை 7 மணி வாசிப்பின் படி அக்கராயன்குளம் அங்குலமும், கரியாலை நாகபடுவான்குளம் 6 அங்குலமாகவும், புதுமுறிப்பு குளம் 3 அங்குலமும், குடமுருட்டி குளம் 6 அங்குலமும், வன்னேரிக்குளம் 3 அங்குலமும் வான் பாய்ந்து வருவதாக நீர்பாசன திணைக்களம் தெரிவிக்கின்றது.
குறித் த குளங்களை அண்மித்த தாழ்நில பகுதிகளில் உள்ள மக்கள் வெள்ள முன்னெச்சரிக்கையுடன் செயற்படுமாறும், குளங்களை பார்வையிடுதல், நீராடுதல் மற்றும் மீனபிடிப்பதில் ஈடுபடுதல் ஆகியவற்றை தவிர்க்குமாறும் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளது. தொடர்ச்சியான மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மக்கள் அவதானமாக செயற்படுமாறு்ம, இடர் ஏதும் ஏற்படும் சந்தர்ப்பங்களில் கிராமசேவையாளர் அல்லது இராணுவத்தினர் மற்றும் பொலிசாரின் உதவியை பெற்றுக்கொள்ளமாறும் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.